முத்தையன்கட்டுக்குளம் வான்கதவுகள் திறக்கப்படும் காட்சிகள்!! மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதா ??
இன்று காலை முத்துஐயன்கட்டு குளத்தினுடைய இரண்டு வான்கதவுகளும், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் திறக்கப்பட்டன. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு அகிலன், உதவிப்பிரதேச செயலாளர் திரு இரமேஸ் மற்றும் 64 படைப்பிரிவின் கட்டளையதிகாரி ஆகியோரும் உடனிருந்தனர். இதே வேளை குறித்த குளம் வடக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இருப்பினும் வடக்கு மாகாணசபை அதிகாரிகளோ பொறியியலாளர்களோ அங்கு காணப்படவில்லை என்பதுடன் வடக்கு மாகாணசபை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதா என சந்தேகமும் தெரிவிக்கப்பட்டது!!







