யாழில் நகை களவு எடுத்த நாதஸ்வர வித்துவான் மரணம்!! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நடந்த சம்பவம்!
நேற்றையதினம் 03-08-2026 யாழ்ப்பாணம் கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்னும் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தனது நண்பனின் வீட்டில் தூக்கில் தொகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனுசனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 18 பவுண் நகைத் திருட்டுத் தொடர்பாக உறவினர்களின் முறைப்பாடு ஒன்று உள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்த பின்னரே தனுசன் துாக்கில் தொங்கியுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

