யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்,
*.மருத்துவ சேவையில் அனைவரினதும் நன் மதிப்பை பெற்றவர்
*.நிர்வாகத்திறன் கொண்டவர்
*.சிறந்த ஆளுமை மிக்கவர்.
*.எல்லோருடனும் உயர்வு தாழ்வின்றி பழகும் பண்பு கொண்டவர்
*.மருத்துவர்கள் , பணியாளரகள்,நோயாளர்கள் என அனைவருடனும் அன்பான வார்த்தைகளினால் அணுக கூடியவர்
*. 31 வருடங்கள் சித்த மருத்துவ துறையில் மருத்துவராக சேவையாற்றியவர்.
பதவி நிலையில்…….
03 வருடங்கள் பம்பை மடு சித்த வைத்தியசாலையில்
மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
*.02 வருடங்கள் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றினார்.
மீண்டும் யாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக பதவியேற்று அதன் பின்னர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்.





