கனடாவில் பெண்ணுடன் சேட்டை விட்ட 36 வயதான இலங்கைத் தமிழ் காவாலி திருக்குமரன் கைது!!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் (Durham Regional Transit bus) இடம்பெற்ற, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Hate-motivated) தாக்குதல் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்கி, அவருக்கு எதிராகப் பல அவதூறான மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான (Anti-Muslim) கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்பின்னர், சந்தேகநபர் அப்பெண்ணைத் தாக்கிவிட்டு, சிறிது நேரத்திலேயே பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவையினால் (NCCM) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
அந்த அமைப்பின் தகவல்படி, பாதிக்கப்பட்டவர் ஹிஜாப் அணிந்திருந்த ஒரு பெண் என்றும், ஒரு கட்டத்தில் சந்தேகநபர் அவரை “பயங்கரவாதி” (Terrorist) என்று அழைத்ததாகவும் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய அக்காணொளியில், நபர் ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கத்தியபடி, எழுந்து சென்று அந்தப் பெண்ணை உதைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த 36 வயதுடைய திருக்குமரன் கந்தசாமி (Thirukumaran Kandasamy) என்பவரை பொலிஸார் புதன்கிழமை கைது செய்து, அவர் மீது தாக்குதல் (Assault) மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் (Criminal harassment) ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அவர் இந்த கோடைகாலத்தின் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணையை ரொறன்ரோ பொலிஸ் சேவையின் வெறுப்புக் குற்றப் பிரிவு (Hate Crime Unit) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

