மட்டு’வில் குளியலறையிலிருந்து 11 வயது சதிஷா சடலமாக மீட்பு!
ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் – 05, நீதிமன்ற விதியைச் சேர்ந்த சதியானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

