யாழில் முழு மப்பில் விஜயகலா சமுர்த்தி அலுவலருடன் நடாத்திய அலங்கோலம் இது!!
சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப்
பயனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை இராஜாங்க
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தரக்குறைவாகப் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது.
நிகழ்விலிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வெளியேறினர்.
“சமுர்த்தி உத்தியோகத்தர்களாகத் தகுதியற்றவர்களே உள்ளனர். அதனால் கிளிநொச்சியில் சுமார் 4
ஆயிரம் பேர் வரை சமுர்த்தி உதவித் திட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அதேபோன்று இங்கும் தகுதியற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களே உள்ளனர்” என்று இராஜாங்க அமைச்சர்
நிகழ்வில் தெரிவித்தார்.
அதனால் சங்கானை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ரீதியான வெளிக்கள
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிகழ்விலிருந்து வெளியேறினர்.
அவர்களைச் சமாதானப் படுத்த சங்கானை பிரதேச செயலர் முயற்சித்தார். எனினும் தம்மை தரக்
குறைவாகப் பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று
பிரதேச செயலரிடம் எடுத்துரைத்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிகழ்வைப் புறக்கணித்தனர்.
சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப்
பயனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (4) செவ்வாயக்கிழமை சங்கானை
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்வில்
பங்கேற்று பயனாளிகளுக்கு உதவித் திட்டங்களை வழங்கினார்.
நிகழ்வின் இடையே மேடையில் ஏறிய சங்கரத்தை துணவியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர்
தமக்கு சமுர்த்தி உதவித் திட்டம் கிடைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சரிடம் முறையிட்டார்.
அதனையடுத்தே மேற்கண்ட கருத்தை இராஜாங்க அமைச்சர் வெளியிட்டார்.
“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தகுதியற்றவர்கள் என்று
தரக்குறைவாகப் பேசினார். சங்கானை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
இதுவரை எந்தவொரு மோசடிக் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளாதவர்கள். அதனை மாவட்டச்
செயலரே உறுதிப்படுத்துவார்.
அவ்வாறு இருக்கையில் அமைச்சர் இவ்வாறு தரக்குறைவாக எம்மையும் கிளிநொச்சியைச் சேர்ந்த
உத்தியோகத்தர்களையும் பேசியது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பில் எமது சங்கத்துடன் பேசி
மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்போம்.
குற்றச்சாட்டை முன்வைத்த சங்கரத்தை துணவியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணின் குடும்ப சூழல்
அறிந்து மாவட்ட செயலக அதிகாரிகளினாலேயே சமுர்த்தித் திட்டத்துக்குள் தெரிவு செய்வதற்கு
பொருத்தமற்றவர் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்” என்று சங்கானை பிரதேச செயலக சமுர்த்தி
வெளிக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.