புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் பலி!! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களுள் ஒருவர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.