பல்சுவை செய்திகள்

யாழ் நல்லுார் மூத்தவிநாயகர் கோவில் பகுதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 2 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!!

இலங்கையில் கொரோனா தொற்றின் புதிய மையமாக உருவாகியுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த தமது பிள்ளைகளை பார்வையிட யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள் என இதுவரை 340 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த நிலையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட சென்று வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் மாநகரசபை எல்லைக்குள் 2 குடும்பங்கள், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 7 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.