புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துக்கல்லுாரி முன்னாள் அதிபர் நிமலன் காசோலை மோசடியில் இன்று மீண்டும் பொலிசாரால்!!

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (5) அவரை கைது செய்துள்ளனர்.

1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில்,, முறைப்பாட்டாளரினால், யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.