புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபையில் திருவிளையாடல் செய்த பெண் அலுவலர்!! யாரும் கவனிக்கவில்லை!!

யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் திட்­ட­ மி­டல் கிளை­யில் பணி­பு­ரிந்த பெண் பணி­யா­ளர் 2016 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 28 லட்­சம் ரூபா நிதி மோசடி மேற்­கொண்ட நிலை­யில் அதனை அற­விட மாந­கர சபை நிர்­வா­கம் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கவில்லை என்று சுட்­டிக் காட்­டப்­ப­டு­கின்­றது.

மாந­கர சபை­யின் திட்­ட­மி­டல் கிளை­யின் கீழ் புதிய கட்­டட அனு­மதி மற் றும் பல்­வேறு அனு­ம­தி­க­ளுக்­காக வழங்­கப்­ப­டும் படி­வங்­கள் மற்­றும் அற­வீ­டு­க­ளின்­போதே குறித்த பண மோசடி இடம்­பெற்­றமை 2016ஆம் ஆண்டு கண்­ட­றி­யப்பட்­டது. நிர்­வாக ரீதி­யில் இருப்பு கணக்­கி­டப்­பட்டே பெறு­மதி கண்­ட­றி­யப்­பட் டது.

குறித்த மூத்த பெண் அலுவலர் மூத்த அதி­காரி ஒரு­வ­ரின் நெருங்­கிய உற­வி­னர் என்று அப்­போது கூறப்­பட்­ட போ­தும் அதனை மாந­கர நிர்­வா­கம் மறுத்­தி­ருந்­தது.

இது குறித்து மாந­கர சபை யாழ்ப் பாணப் பொலிஸ் நிலை­யத்­தில் குறித்த பெண் அலு­வ­ல­ருக்கு எதி­ராக முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

நிர்­வாக ரீதி­யி­லும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த விட­யத்­தைப் பொலிஸார் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். அத­னை­ய­டுத்து ஒரு லட்­சத்து 70 ஆயி­ரம் ரூபாவை அந்­தப் பெண் அலு­வ­லர் மீளச் செலுத்­தி­யி­ருந்­தார்.

பணத்­தைத் தானே மோசடி செய்­த­தா­க­வும் ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார். இருப்­பி­னும் நிர்­வாக ரீதி­யில் அடுத்த கட்ட விசா­ர­ணைகளுக்குக் கொண்டு செல்­லப்­ப­டாது 28 மாதங்க­ளாக காலம் கடத்­தப்­ப­டு­வ­தா­கச்சுட்­டிக்­காட்டப்­ப­டுகின்­றது.