முல்லைத்தீவில் ஜெயபவானைக் காணவில்லை!!
முல்லைத்தீவு – பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய ஒருவர் நேற்று முன்தினம் காணாமல் போயிருப்பதாக மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன்குளம் பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்த பாலசிங்கம் ஜெயபாவான் (வயது 45) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காணாமல்போயுள்ளார்.
இதேவேளை, இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0771127277 அல்லது 0779286264 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.