புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பல மில்லியன் பணம் பெற்று ரஷ்யாவில் வேலை வாய்ப்பு என ஏமாற்றப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை இளைஞர்கள்!! கதறுகின்றார்கள்!!

ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x