புங்குடுதீவில் கரையொதுங்கிய அழுகிய நிலையில் கரையொதுங்கிய சடலம்
புங்குடுதீவு கடற்கரையில் நேற்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உள்ளது. நேற்று காலை ஏழு மணியளவில் புங்குடுதீவு பத்தாவது வட்டாரத்தில் கண்ணகை அம்மன் கோவில் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத சடலமொன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.


