நல்லூர் LAVIN’s சைவ உணவக உரிமையாளருக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் தண்டம்!! கட்டாவிடில் 6 மாத சிறை!! எதற்காக?
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள LAVIN’s சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.
இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

