சஜித்தின் முதலாவது பரப்புரைக் கூட்டம் ஆரம்பம் – இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு(Photos)
காஞ்சிபுரத்தில் பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக, ஸ்ரீதர் தனபாலின் டிரைவரான தினேஷ் தலைமையில் ஒரு கும்பலும், மைத்துனரான தணிகா தலைமையில் ஒரு கும்பலும் மோதி கொண்டது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் என்ற இளைஞர் செய்யாறில் ஓடும் பேருந்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எதிர் தரப்பான தணிகா கும்பலைச் சேர்ந்த சிலர் கைதாகினர்.
இந்த நிலையில் சதீஷ் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் தாதா ஸ்ரீதர் தனபாலில் சித்தப்பா மகன் கருணாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வணிகர் வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கருணாகரன், அங்கு நண்பர் விக்னேஷ் என்பவருடம் பேசிக் கொண்டிருந்த போது தினேஷ் தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அப்போது தடுக்க முயன்ற நண்பர் விக்னேஷிக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. கொலை குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாதா ஸ்ரீதர் தனபாலின் இடத்தை பிடிக்க கொலைவெறியுடன் மோதிக் கொண்டு வரும் இரு தரப்பையும் காஞ்சிபுரம் போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.