கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையில் நடந்த கடும் மோதல் !! அதிரடிப்படை சுற்றி வளைத்த காட்சிகள்!! வீடியோ
கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் இன்று (24) இடம்பெற்ற, 2 குழுக்களுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி – அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் பரபரப்பு!
காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும் கிராம இளைஞர்களுக்கும் இடையில் கடும் மோதல்!
கற்றாளைஅமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள திணைக்கள அதிகாரிகள் சென்ற போது, திட்ட ஊழியர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கு வந்த கிராம மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணையை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

