புதினங்களின் சங்கமம்

யாழில் அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது!

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

இந் நிலையில் கடகரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நீண்ட நாட்கள் கடலுக்குள் இருந்ததால் சிலையின் சில பகுதிகளில் கடல் பாசிகளும் படிவங்களும் காணப்படுகின்றன. அம்மன் சிலை கரையொதுங்கிய தகவலறிந்து சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்க திரண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது கரை ஒதுங்கிய அம்மன் சிலைக்கு முதற்கட்டமாகப் புனித நீர் ஊற்றித் தூய்மை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் பக்திப் பெருக்குடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) இருந்து, அண்மைக் காலத்தில் மக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பூர்விக வரலாற்றோடு இதற்கு ஏதேனும் தொடர்பிருக்குமோ எங்கிற ஐயப்பாடும் பிரதேச மக்களுக்கு எழுந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x