யானை தாக்கிய யாழ்.பல்கலையின் சிங்களப் பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தில் விரிவுரையாளரான பெண்ணொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8.15 மணியளவில் அவர் யானை தாக்குதலிற்கு இலக்கானார். டில்ருக்சி(35) என்பவரே உயிரிழந்தார்.
கடுமையான காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

