புதினங்களின் சங்கமம்

கொழும்பு – பதுளை பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள், பொலிஸார் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் இணைந்து காயமடைந்த பயணிகளை மீட்டு தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த 42 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x