புதினங்களின் சங்கமம்

ரவுடிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் யாழ் NPP எம்.பி இளங்குமரன் அந்தரங்கத் தொடர்பு? அதிா்ச்சி வீடியோ

NPP கட்சி இலங்கையில் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் யாழில் குறித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இனிமேல் யாழில் ரவுடிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடமில்லை என வீர வசனம் பேசி பொலிசாரைக் கொண்டு ஒரு சில காவாலிகளை கைது செய்தும் நடவக்கைகளையும் மேற்கொண்டு சீன் போட்டிருந்தார்.

டில்லு எனப்படும் முக்கிய போதைப்பொருள் காவாலி மற்றும் வாகன விற்பனை என்ற பெயரில் போதைப்பொருள் கடத்துபவர்கள் போன்றவர்கள் தற்போது இளங்குமரனுடன் டீல் பேசி குறித்த எம்.பியை தம்வசப்படுத்தியுள்ளதாக காவாலிகள் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

அண்மையில் பயங்கரவாதப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட சங்கீதன் என்ற பாடகர் விடுவிப்பதற்கு குறித்த டீலே காரணம் எனவும் டில்லுவின் வலது கரமான வடமராட்சி தொண்டமனாற்றுப் பகுதியைச் சேர்ந்த காவாலி செந்துாரனுடன் NPP யாழ் மாவட்ட உறுப்பினர்கள் தொடர்பு கொண்டே சங்கீதனை விடுவித்ததாகவும்  குறித்த காவாலி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் வெளிப்படையாகவே கூறியிருந்தான்.

இவ்வாறான நிலையில் யாழ் நல்லுார்ப் பகுதியில் காவாலிகள் பட்டப்பகலில் நடாத்திய மோட்டாா சைக்கிள் அணிவகுப்புத் தொடர்பாக அப்பகுதியில் சென்றவர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டதாகவும் குறித்த காவாலிகள் தாங்கள் NPP அமைப்பினர் என பொதுமக்களுக்கு கூறி எச்சரித்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டப்பகலில் தலைக்கவசம் அணியாமலும் குறி்த்த காவாலிகள் வீதியில் சாகசம் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BIP 3122 bike இல் பின்னால் இருந்த செல்லும் காவாலி தலைக்கவசம் அணியாமல் செல்கின்றான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x