நுவரெலியாவில் கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த 34 வயது பெண் டொக்டரின் சடலம் மீட்பு! கொலை என சந்தேகம்!
தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவர் காரொன்றிலிருந்து இருந்து சடலமாக தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று (17) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம – குருந்து கொரட்டுவ – பலல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள தங்குமிடமொன்றிற்கு வருகை தந்திருந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் சடலத்தை காதலன் அன்றைய தினம் இரவே காரொன்றிலிருந்து ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

