புதினங்களின் சங்கமம்

செம்மணியில் குவியல் குவியலாக என்புக்கள்!

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது இன்றைய தினம் 05 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுக்களில் 06 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இதுவரையில் 34 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழிக்குள் என்பு குவியல்கள் இரண்டு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்திருப்பதால் அகழ்வாய்வு தளம் மேலும் விஸ்தரிக்ப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது 275 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 272 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x