புதினங்களின் சங்கமம்

பேச்சுவார்த்தை தோல்வி!! ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!!

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ரயில் தொழிற்சங்கங்கள் இன்றும் (01) தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கோரிக்கை சிலவற்றை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சரவை இணை குழுவுடன் நேற்று (30) பிற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க நேர்ந்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜனக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினத்திலும் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை நிரந்தர தீர்வொன்று கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தள்ளதால், பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.