தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மிகவும் துடிப்பான இளைஞனாக அறியப்பட்ட குறித்த இளைஞனின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் இளவயது தற்கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.


