புதினங்களின் சங்கமம்

யாழில் பல பகுதிகளில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பாப்பா காவாலி பிடிபட்டது எப்பபடி?

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த காவாலி பாப்பா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய காவாலியை மருதனார்மடம் பகுதியில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸார் கைக்குண்டுடன் கைது செய்து , சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் அண்மையில் கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , இளைஞனுக்கு படுகாயமேற்படுத்தியதுடன் , இளைஞனின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்ற கும்பலில் ஒருவராக குறித்த காவாலியும் செயற்பட்டுள்ளான்.

அத்துடன் யாழில். இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பல்வேறு வாள் வெட்டுக்கள் மேற்கொண்ட குறித்த காவாலிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றதாகவும் , தற்போது மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட காவாலியை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.