யாழில் பச்சைக் கள்ளியும் கள்ளனுமான டொக்டர் தம்பதிகளின் லீலைகளுக்கு மானிப்பாய் பொலிசாரும் உடந்தையா? பரபரப்பு வாக்குமூலம் இதோ! ஓடியோ
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்து ஒரு கிழமை கடக்கும் நிலையில் மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட தரப்பினரை மிரட்டும் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில் வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளனர்.
பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினால் பலர் அடிமைகளாக அங்கு வேலை செய்வதாக தெரிவித்தார். குறித்த வைத்திய தம்பதியினர் நீர் கொழும்பில் வசிக்கும் இன்னுமொரு தரப்பினர் ஊடாக ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பலர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்திய தம்பதியினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

