புதினங்களின் சங்கமம்

மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி பலி!

மதவாச்சிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணகொல்லேவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (17) அதிகாலை 2.30 மணி அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் மதவாச்சிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.