புதினங்களின் சங்கமம்

நீதிமன்றத்தால் பொலிஸ் நிலையத்தை விட்டு துரத்தப்பட்ட கோப்பாய் பொலிசார்!! பெட்டி படுக்கையுடன் நடுத்தெருவில் பரிதாபகரமாக நின்ற பொலிசார்!! புகைப்படங்கள்

யாழ்ப்பாணம், கோப்பாய் இராசபாதையில் அமைந்துள்ள பொலிஸ் நிலையக் காணி, அதன் உரிமையாளர்களிடம் இன்று (புதன்கிழமை) யாழ். நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகாலமாகப் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வந்த இந்தக் காணி விடுவிக்கப்பட்டதையடுத்து, உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
30 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின் தீர்ப்பு:
கோப்பாய் பொலிஸ் நிலையம் இயங்கி வந்த இந்தக் காணியின் உரிமையாளர்கள், தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் நீண்டகாலமாகக் கோரி வந்தனர். எனினும், இதற்கு உரிய பலன் கிட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு காணிக்குச் சொந்தமான ஏழு உரிமையாளர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின்படி, யாழ். மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன், பொதுமக்கள் காணியை விட்டு வெளியேறி, அதனை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்றப் பதிவாளர் நடவடிக்கை:
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், இன்றைய தினம் (புதன்கிழமை) நீதிமன்றப் பதிவாளர் நேரடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்தார். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் நோக்குடன், அங்கிருந்த பொலிஸாரை வெளியேற்றிய அவர், குறித்த காணியை உரிமையாளர்களிடம் கையளித்தார்.
பொலிஸ் நிலையம் மாற்றம்; உரிமையாளர்கள் மகிழ்ச்சி:
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, 40 பரப்பு காணியில் தற்போது 30 பரப்பு மாத்திரம் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பரப்பு காணியில் உள்ள ஒரு வீடு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இதையடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் மீண்டும் தனித்து இயங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாகத் தமது காணியை இழந்து வேறு இடங்களில் வசித்து வந்த உரிமையாளர்கள், இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டனர்.
No photo description available.No photo description available.No photo description available.May be an image of one or more people and treeMay be an image of treeMay be an image of treeMay be an image of ambulanceMay be an image of treeMay be an image of treeMay be an image of treeMay be an image of treeMay be an image of jeepMay be an image of treeMay be an image of treeMay be an image of one or more people and treeMay be an image of rabbit hutch and speaker