புதினங்களின் சங்கமம்

ஒரு வழியாக செவ்வந்தி கைது செய்யப்பட்டாள்!! எங்கே வைத்து கைதானாள் தெரியுமா?

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி  உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தியைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது.

சர்வதேச காவல்துறையின் ஆதரவுடன் கொழும்பு குற்றப்பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இஷார செவ்வந்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே சமீபத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான பல முக்கியமான உண்மைகளை கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.