புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவிலிருந்து சென்ற டொல்பின் வான் அதிகாலையில் கோர விபத்து; 4 போ் பலி; நால்வர் காயம்! வீடியோ

அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை நடந்த வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த 4 இளைஞர்கள் #உயிரிழந்த்துள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, வேனில் பயணித்த 4 பேர் #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

#உயிரிழந்தவர்களாக முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும்
புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது-25) என்ற 4 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த வேனில் பயணித்த ஏனைய இருவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

May be an image of 2 people, ambulance and vanMay be an image of 4 people, people smiling and text that says 'லொறி f JOIN THIS GROUP வேன் மோதி விபத்து TvullatentuRIP RIP 心 உயிரிழந்த முல்லைத்தீவை சேர்ந்த 4 இளைஞர்கள்..!'