ரணிலை கைதுசெய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு நடந்தது என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் இந்த அரசின் சட்ட ஆட்சி எனக்கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஜே .வி.பி. யின் காட்டு நீதிமன்ற செயற்பாடுகளை நாங்கள் அறிவோம். இந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தவா இப்போது முயற்சிக்கின்றார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

