புதினங்களின் சங்கமம்

பளை மருத்துவ அதிகாரி சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான பின்னணி!!

கிளிநொச்சி பளை பிர­தேச மருத்­து­வ­ம­னை­யின் பொறுப்பு மருத்­துவ அதி­காரி
சி.சிவ­ரூ­பன் நேற்­று­முன்­தி­னம் இரவு பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப்
பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இவர் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தன் வசம் ஆயு­தம் வைத்­தி­ருந்­தார், தமி­ழீழ விடு­த­லைப்
புலி­க­ளின் மீளு­ரு­வாக்­கத்­துக்­கான முதன்மை செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டார்,
முக்­கிய நபர் ஒரு­வ­ரைக் கொலை செய்­யத் திட்­டம் வகுத் திருந்­தார் என்ற
குற்­றச்­சாட்­டுக் க­ளின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலிஸ்
தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்­று­முன்­தி­னம் இரவு 8.30 மணி­ய­ள­வில் மருத்­துவ அதி­காரி பயங்­க­ர­வா­தத்
தடுப்­புப் பிரி­வி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் இரவு 9.30 மணி­ய­வில்
பளை பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­து­டன், இரவு 10.30
மணி­மு­தல் மருத்­து­வ­மனை பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­ன­ரால்
சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது.

அதன்­பின்­னர் அங்­குள்ள மருத்­துவ அதி­காரி ஒரு­வ­ரி­டம், மருத்­துவ அதி­காரி
சிவ­ரூ­ப­னின் பொறுப்­புக்­களை ஒப்­ப­டைக்­கச் செய்த பயங்­க­ர­வா­தத் தடுப்­புப்
பிரி­வி­னர், மருத்­து­வ­ம­னை­யின் நட­வ­டிக்­கை­ளில் தம்­மால் எந்­தப் பாதிப்­பும்
ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கடி­தம் ஒன்­றைப் பெற்­றுக்
கொண்டு மருத்­துவ அதி­காரி சிவ­ரூ­பனை அழைத்­துச் சென்­ற­னர் என்­றும்
கூறப்­ப­டு­கின்­றது.

கைது செய்­யப்­பட்ட மருத்­துவ அதி­காரி மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக யாழ்ப்­பா­ணம்
பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும்,
விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரு­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது நாட்­டில் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில்
இந்­தக் கைது நடந்­துள்­ளது. கடந்த ஏப்­ரல் மாதம் நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத்
தாக்­கு­தலை அடுத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் அவ­ச­ர­கா­லச்
சட்­டம் நடை­மு­றைக்­குக் கொண்டு வரப்­பட்­டது.

அதன்­பின்­னர் நாட்­டில் பாது­காப்பு சீரான நிலை­மைக்கு வந்­துள்­ளது, இனி­மேல்
அவ­ச­ர­கா­லச் சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது என்று அவர் பல தட­வை­கள்
தெரி­வித்­தி­ருந்­த­போ­தும், ஒவ்­வொரு மாத­மும் அரச தலை­வ­ரால் அவ­ச­ர­கா­லச்
சட்­டம் நீடிக்­கப்­பட்டு வரு­கின்­றது.