சற்றுமுன் யாழில் கரையொதுங்கிய திமிங்கிலம்.! வீடியோ
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் இன்றையதினம் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



