புதினங்களின் சங்கமம்

இலங்கையில் ஆட்டோ ஓட்டும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சட்டம்!!

இலங்கையில் ஆட்டோ ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய சட்டம்  நடைமுறைப்படுத்தியுள்ளது.

அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆட்டோ  ஓட்ட தற்காலிக உரிமத்தைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். தற்காலிக உரிமத்தைப் பெற, வெளிநாட்டினர் எழுத்துப்பூர்வ தேர்வு, நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஓட்டுநர் உரிமங்களை வழங்கவோ, வெளிநாட்டினர் ஆட்டோ ஓட்டுவதற்கு வசதிகளை வழங்கவோ வேறு எந்த நிறுவனத்திற்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை என  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் உதயகுமார தெரிவித்தார்.