புதினங்களின் சங்கமம்

வடமராட்சியில் உபதபாலதிபர் ஜொய்சி பலி!

வடமராட்சி கிழக்கு முள்ளியான் உப தபாலதிபரும், ஒரு பிள்ளையின் தாயுமான ௮ந்தோனியோச் ஜொய்சி ௮வர்கள் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (26) உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவால் யாழ் போதனா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் இன்று(26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.