புதினங்களின் சங்கமம்

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என அறிவிப்பு..! video

சமூக மற்றும் அரசியல் செயற்பட்டாளர் டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் டேன் பிரியசாத் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
டேன் பிரியசாத் மீது நான்கு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.