புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறையில் விடுதலையான சிறைக் கைதிகள் மூவர் உள்ளிட்ட அறுவருக்கு தொற்றுறுதி!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான கைதிகளில் மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையி இவ்வாறு ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று (மார்ச்-01) யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 244 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பரிவில், சிறையில் இருந்து விடுதலையான கைதிகள் மூவருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பரிவில் மரணவீடு ஒன்றுடன் தொடர்புபட்டு தொற்றுறுதியான நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டு யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.