புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் போரளியின் குடும்பம்!! நடந்தது என்ன?

முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் பகுதியில் முன்னாள் போராளிகளின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வசித்து வந்ததது நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாதநிலையில்
வீட்டு உபகரணங்கள் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Image may contain: outdoorImage may contain: night and fireImage may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: 1 person, sitting, standing, tree, child and outdoor