புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு இராணுவமுகாமுக்குள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு 59 ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கின்ற இலங்கை இராணுவத்தின் 16 ஆவது பொறியியல் பிரிவு முகாமில் சமையல் செய்வதற்காக வருகைதந்திருந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (29) காலை குறித்த நபர் தூக்கில் தொங்கியவாறு இருப்பதை அவதானித்து முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் கெக்கிராவ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய கருணாரட்ன என தெரியவருகின்றது.