கனடாவில் தமழ் இளைஞர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட கொள்ளையனை விடுவித்த பொலிசார்!! வீடியோ
கனடாவில் சமீபகாலமாக தொடரும் திருட்டு சம்பவங்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் தமிழர்களின் நகைக் கடைகளில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.தினம் ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெறுகின்றது. பல கோடி பெறுமதியான நகைகள் திருட்டுக் கும்பல்களால் பட்டப்பகலில் திருடப்படுகின்றன.நேற்றய தினம் (26) மிடில்ஃபீல்ட் மற்றும் பிஞ்ச், ஸ்கார்பரோவில் உள்ள வர்த்தக கட்டடத்தில் உள்ள நகை கடை ஒன்றில் திருட்டு கும்பல் திருட முற்பட்ட போது அங்கிருந்த தமிழ்மக்களால் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என அறியமுடிகிறது. அவர்களை பொலிஸாரிடம் அங்கிருந்தவர்கள் கையளித்துள்ளனர். அவர்களை கைது செய்த பொலிசார் வெளியில் அழைத்துச் சென்று அவர்களை விடுவித்துள்ளனர்.இவ்வாறு திருடமுற்பட்டவர்களை பிடித்துக் கொடுத்தும் பொலிசார் அவர்களை விடுவித்துவிட்டார்கள் என அங்கிருந்த மக்கள் விசனம் தெரிவித்தார்கள்.

