யாழ்ப்பாணத்தில் மீண்டும் மருத்துவ மாபியாக்களின் அட்டகாசம்!! மருத்துவ நிபுணரினின் அதிர்ச்சித் தகவல்கள்!!
GMOA (அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ) மாபியா தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிறந்த சுகாதார சேவையை வழங்க முட்டுக்கட்டை
நான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறந்த சுகாதார சேவை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொழில் வாண்மை (professionalism ) தொடர்பாக மருத்துவ பட்டப் பின்படிப்பு நிலையம் (PGIM ) மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்களிலும் வைத்தியர்களுக்கும் ஏனைய சுகாதார பணியாளர்களுக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இலவசமாக எனது சொந்த செலவிலேயே சென்று உரையாற்றி வருகிறேன். இந்த நிலையில் வட்டுக்கோட்டை அரச வைத்தியசாலையில் தமிழ் மக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் வைத்தியசாலை பொறுப்பதிகாரி செந்தூரன் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 29.10.2024 எனது சொந்த செலவில் வட்டுக்கோட்டைக்கு சென்று இந்த இலவச உரையை வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்து இருந்தேன். இந்த நிலையில் இன்று காலை GMOA மாபியாவின் யாழ் கிளை செயலாளர் மயூரன் எனது உரையை நிறுத்தாவிட்டால் GMOA மாபியா செந்தூரன் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று மிரட்டியுள்ளார்.
வைத்தியர் மயூரன் ஏனைய வைத்தியர்கள் இடமாற்ற உத்தரவுக்கு அமைய புதிய வேலைத்தலங்களுக்கு தாமதம் இன்றி சமூகம் அளிக்க வேண்டும் என்று மிரட்டி வந்த அதேவேளை பல மாத காலமாக தனக்கு வழங்கப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு செல்லும் இடமாற்ற உத்தரவை உதாசீனம் செய்து தன்னுடைய மாபியா குணத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த உண்மையை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதை அடுத்து இவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. இதையடுத்து என் மீது கொண்ட தனிப்பட்ட குரோதம் காரணமாக எனக்கு எதிராக அனாமதேய போலி முகநூல் முகவரிகளின் மூலமாக பல தாக்குதல்களை இவரும் இவரது குழுவினரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், நேரடியாகவே வைத்தியர் செந்தூரன் மீது இவரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாதுக்களுக்கான பயிற்சி நெறியின் போது தொழில் வாண்மை தொடர்பான கட்டணம் செலுத்தப்படும் விரிவுரைக்கு சுகாதார சேவைக்கு வெளியே உள்ள மருத்துவமாதுக்களின் கடமை மற்றும் பொறுப்புகள் பற்றி எதுவும் அறியாத ஒரு மிருக வைத்தியர் நியமிக்கப்பட்டு உள்ளார். தொழில் வாண்மைக்கு புறம்பான இந்த முறையற்ற விரிவுரை நியமனத்தை இதுவரை தட்டி கேட்க முடியாத GMOA மாபியா, தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டிய ஒரே காரணத்துக்காக, மருத்துவ பட்டப்பின்படிப்பின் வாசனை அறியாத மருத்துவர் மயூரன் எனது பணியை வட்டுக்கோட்டையில் அற்ற விடாமல் தடுக்க முயல்கிறார்.
கொரோனா உச்சம் அடைந்த காலத்தில் சுயவிருப்பத்தின் பேரில் சமுதாய மருத்துவ நிபுணராகவும் சர்வதேச தொற்றுநோயியல் சங்கத்தின் உறுப்பினராகவும் வடமாகாணத்துக்கு கடமையாற்ற வந்த என்னை 3 மாதத்தில் தடுத்து நிறுத்தி தங்களுடைய உறுப்பினர்களை விட ஊடகங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தேன் என்ற காரணத்துக்காக கொழும்புக்கு அனுப்பிய பெருமையும் GMOA மாபியாவையே சேரும்.
GMOA மாபியாவின் தொடரும் அநியாய செயல்கள் தொடர்ந்து அம்பலப் படுத்தப்படும்.
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
27.10.2024