அங்கஜனுக்கு தபால்பெட்டியாம்!! யாழ்ப்பாணச் சனத்தைப் பற்றி இனித்தான் அங்கஜனுக்குத் தெரியும்!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
போன நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியாக இந்த கோத்தபாயாவால் கூறப்பட்ட ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு என்ற கூற்றை நம்பி யாழ்ப்பாணத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் அதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை வைத்து பிரதேசசெயலகங்களில் நேர்முகத் தேர்வுகளும் மும்முரமாக நடைபெற்றிருந்தது.
அக் காலப்பகுதியில் மேலதிக அரசஅதிபராக இருந்த தற்போதய அரச அதிபரும் அங்கஜன் மற்றும் அங்கஜனின் சித்தப்பா ராஜன் அவரது போதைப்பொருள் கடத்தல்காரனான மகன் போன்றவர்களின் நெருங்கிய கூட்டாளியுமான பிரதீபன் குறித்த நேர்முகத்தேர்வில் பங்கு பற்றியவர்கள் மற்றும் விண்ணப்பித்தவர்கள் அனைவரது பெயர், விபரங்களையும் தொலைபேசி இலக்கங்கங்களையும் அங்கஜனிடம் கையளித்திருந்தார்.
அந்த விபரங்களை வைத்து யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் உறவுகளையும் ஏமாற்றி என் மூலமாகவே அந்த வேலை வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது என மண்டையைக் கழுவியதுடன் ” என் கனவு யாழ்” என்ற வாசகத்தையும் வைத்து யாழில் அதி கூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார் அங்கஜன். இந்த வெற்றிக்கு அங்கஜன் மட்டுமல்ல அங்கஜனின் சித்தப்பா ராஜன் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ராஜனின் மகன், மேலதிக அரச அதிபராக இருந்த பிரதீபன் ஆகியோரும் காரணமாக இருந்தார்கள்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அங்கஜனுக்கு வாக்களித்த அத்தனை பேரும் இம் முறை அங்கஜனுக்கு பரிசு கொடுக்க காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.