கிளிநொச்சி நெத்தலி ஆற்றில் அடிகாயங்களுடன் 27 வயது சம்சுதீன் சடலமாக மீட்பு!!
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

