வவுனியா கம்ஷிகாவின் திறமைகள் இதோ..!
வவுனியாவில் வசித்து வரும் கம்ஷிகா மகாதேவன் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்
கொண்டவர்.
வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியையும் பின்னர் சைவப்பிரகாச
மகளிர் கல்லூரியில் படித்தார் இவர் தற்போது திறந்த பல்கலைகழகத்தில் வணிக
முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பு படித்து வருகின்றார்.
தனது திறமையை மேம்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் தனக்குள் வைத்துக்கொண்டு
ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.
தனது கலையினை அவ்வாறே விடாது தற்போதும் அவர் தனது கவிதையை தோழி கவிதாயினி எனும் புனைப்பெயரில் கவிதை எழுதி தனது திறமையினால் பலரை மகிழ்வித்து வருகின்றார்.


