பட்டப் பகலில் யாழ் நகர் நகைக்கடையில் பொதுமக்களிடம் கொள்ளையடித்த நகைக்கடை முதலாளி!! Photos
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்….
பட்டப்பகலில் நகைக்கடையால் கொள்ளை!!
கொள்ளை 1 : (09.05.2024 – யாழ்.நகர்)
2023 இல் 10,500/= க்கு வாங்கிய நகை 2024 இல் அதேகடையில் 1500/= தான் பெறுமதி என மதிப்பிட்டு வாங்கமுயற்சி!
(அப்பா கடையில் 10,500/= நகை, மகன் கடையில் 1500/= தான் பெறுமதியாம்!!!???)
கொள்ளை 2 :
அப்பா கடையில் 260 mg ஆக இருந்த நகை மகன் கடையில் 220 mg ஆக நிறை காட்டுது!!
(2023 அட்ஷய திதிக்கு வாங்கினது – பெட்டிகூட திறக்கேல தங்கம் 40 mg ஆவியாகிற்றோ?)
கொள்ளை 3 :
2020 இல் 48,000/= க்கு வாங்கிய நகையை 27,000/= க்கு வாங்க முயற்சி!!!
(2020ஐ விட தற்போது நகைவிலை 3 மடங்கு)
கொள்ளை 4 :
நகைகொள்வனவை நாம் நிறுத்தியதால் பற்றுச்சீட்டு கட்டணமாக 1500/= அறவீடு!!!
(பற்றுச்சீட்டு 10/= கூட பெறுமதியானதல்ல)
கொள்ளை 5 :
காசை நாம் மீளபெற்றபோது 2000/= குறைவு
(வழக்கமான “சொறி” யுடன் முடிந்தது)
“நகைக்கடையே கொள்ளையடித்தால், யாழ்.பொலீசில முறையிடலாமோ??!!!”
“பலசரக்குகடை தராசை பதம்பார்க்கும் நிறுத்தல் அளவுப்பகுதியினர், இங்கையும் இடைக்கிடை கொஞ்சம் காலடிபடவேணும் !”
குறிப்பு : அட்க்ஷயதிதியன்று மோதிரம் 10,000/= க்கு வாங்கியோர், அது 13 கரட்டாம்!
அதைக்குடுத்து சந்தையில 1Kg கரட்டும் வாங்கேலாதாம் !!!?? வாழ்க! பொன்சேவை!


