புதினங்களின் சங்கமம்

யாழ் நகர் முஸ்லீம் பகுதிக்குள் கள்ள மாடு அறுக்கும் இடம் சுற்றி வளைக்கபட்ட காட்சிகள் இவை!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடத்தில், பாழடைந்த கட்டடம் ஒன்றில், களவாக பிடிக்கப்படும் மாடுகள் மற்றும் ஆடுகளை வெட்டி இறைச்சியாக விற்று வந்த நிலையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபராக ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வருவதாகவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.No photo description available.May be an image of 3 peopleNo photo description available.