புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு விசுவமடுவில் கிருஸ்ணராசா வீட்டினுள் இருந்து சடலமாக மீட்பு!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10கட்டை பகுதியில் வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
சடலமாக இனங்காணப்பட்டவர் விசுவமடு 10கட்டையை சேர்ந்த கிருஸ்ணன் கிருஸ்ணராசா (52)வயதுடைய 05பிள்ளைகளின் தந்தை என இனங்கானப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்