கிளிநொச்சியில் ஓடும் பேரூந்திலிருந்து பெண் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் CCTV காட்சிகள்!!
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வேலைக்காக சென்ற பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம் அரச பேருந்தில் பயணித்த பெண் தரிப்பிடத்தில் இறக்கியுள்ளார்.
இதன்போது, பெண் இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது விழுந்த குறித்த பெண் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

