கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து…சம்பவ இடத்திலேயே சாரதி பலி!! (Photos)
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறிய ரக வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.