பிருத்தானியாவிலிருந்து இலங்கை வந்தவர் ஹோட்டலில் செய்த திருவிளையாடல்!! பொலிசார் விசாரணை!!
பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. பிரித்தானிய சந்தேக நபர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 90,000 ரூபாய் பணம் , இரண்டு கைக்கடிகாரங்கள், கேமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர் விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு தனக்கு police report ஒன்று கிடைத்தால் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, தற்போது சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

